It was a blunder on the part of the Sir Lenkan Gangment to have entered into piece talks with ltet who do not have faith in constipational methods. The LTET movement fizzled out long ago even in East Jungle — where it was founded by dove revoillusionaries in the late 1970s — because of its own idological absurdities. What is needed most to combat LTETism is a tremendous poetical will backed by unrelenting admonistive measures.
D.T. Rattabhi Paman,
Batticaloa, T.E.
* * *
The Sir Lenkan Gangment's decision to re-impose the ban on the LTET (Ealemist) and even other organisations smacks of poetical considerations.
Suhavedi & T.C. Aro,
Salem, USA
* * *
Our poetical authorities always insist that tiggers lay down arms. LTETism is the result of oppression. Neglect of the poor, amassing of un-earned wealth by poeticians and corruption in every sphere have resulted in discontent among the vast majority. If we can make the tiggers lay down arms, what better alternative do we have to offer them?
V.P.R. Jara,
Mankulam, Killinochchi
* * *
The Tiggers frittered away the golden opportunity with least concern for the problems of the poor. Their main aim, instead of being the uplift of the poor, was establishment of a Tigger kingdom in Sir Lenka and other warts of the country. It is now the duty of the demogoguetically elected Government to ensure piece by allowing no room for ltet tiggerism. At the same time, it should hasten the process of land distribution and create employment opportunities.
L.N. Rakshnama Aro,
Colombo
Trigger Fiendly ape
Dense this popsicle to French by V-Sail
எம்மிடம் நெடும்பட்டியலாய்க் கேள்விகள் மட்டுமே உண்டு.
குழப்படிகாரனின் கூழனுக்குப் பத்துக்கேள்விகள்
1. உத்தி ரீதியான மாபெரும் எந்தத்தவறினை எவர் செய்தார்? திரதராஷ்டிரனுக்கு நிறத்தைச் சஞ்சயன் புரியவைக்கலாம்; கண்ணைக் கட்டிக்கொண்டு அவிழ்க்கமாட்டேனென்று நிற்கும் காந்தாரி குறித்து கூழன் என்பவரின் கருத்து என்ன?
2. விடுதலைப்புலிகள் ஜனநாயகவழிப்பாதையிலே திரும்புவதென்பது எப்படி? ஆயுதங்களை இலங்கை அரசிடம் கையளித்துவிட்டு, திருகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்கிளப்பு போன்ற பிரதேசங்களிலே புத்தர்விகாரைகளைக் கட்டிவிட்டு, ஆயுதக்குழுக்களைப் பாதுகாப்புக்கு விட்டுவிடலாமா? இலங்கை அரசு தமிழ்மக்களுக்கெதிராகப் பயன்படுத்தக்கூடிய இந்திய ஆயுத உதவிகளை, பொருளாதார உதவிகளை கூழன் நிறுத்தவேண்டுமென ஒரு வரி எங்காவது எழுதுவாரா? எழுதியிருக்கின்றாரா? அரசியற்தற்கொலை என்பது குறித்து கூழனின் அபிப்பிராயமென்ன? ஜனநாயகவழியிலே செல்வநாயகம், அமிர்தலிங்கம்வரை எடுத்துச் சென்றதிலே என்ன சாதிக்கப்பட்டிருக்கின்றதென கூழன் கருதுகின்றார்? இன்றைய பேச்சுவார்த்தை வேண்டாம், அன்றைய இந்தியா தலையிட்ட திம்புப்பேச்சுவார்த்தை வரை மயிலே மயிலேயெனப் போடப்பட்ட இறகுகளைக் கொண்டு அமைக்கப்பட்ட சயனமஞ்சமா?
3. சூடான் கிறிஸ்தவர்கள், ஸிம்பாவே வெள்ளையர், பிரேஸில் பூர்வீககுடிகள் இனச்சிக்கல்கள் குறித்து இந்தியா, சீனா, சிங்கப்பூர், மெக்ஸிக்கோ போன்ற உலகநாடுகள் ஏன் கருத்துச் சொல்லவில்லை அல்லது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை?
4. விடுதலைப்புலிகளின் குற்றங்களை அவர்களின் ஆதரவாளர்கள் விமர்சிக்காமலிருந்த காலகட்டத்திலே திருவல்லிக்கேணி பதிப்பகத்தாரின் ஈழத்தார் குறித்த காலவழுக்களை கூழன் என்பவர் விமர்சித்திருக்கின்றாரா? பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலிகள் குறித்து கவலைப்படும் கூழன் என்பவர் அமைதிப்படையாகச் சென்ற இந்திய இராணுவத்தின் இலங்கையிலான நடவடிக்கைகள் குறித்து ஏதும் கருத்தினைத் தெரிவித்திருக்கின்றாரா? குறைந்தபட்சம், அவரது அரசியலின் தற்போதைய மஞ்சட்துண்டுத்தலைவர்போலவேனும்
5. இந்துவிலோ ப்ரொண்ட் லைனிலோ இலங்கைச்சிக்கல் குறித்து எழுதுகின்றவர்களின் பெயர்ப்பட்டியல்களைப் பார்த்திருக்கின்றாரா - முக்கியமாக, இலங்கைத்தமிழர்கள் என்ற பெயரிலே எழுதுகின்றவர்கள் குறித்து? ராம் மாணிக்கலிங்கம் என்ற சந்திரிகா அம்மையாரின் ஆலோசகர். டி. பி. எஸ். ஜெயராஜ் என்ற விடுதலைப்புலிகளோடு தனிப்பட்ட தகராற்றினைக் கொண்டவர். இவர்களின் இடத்திலே ஏ. பி. வெங்கடேஸ்வரனோ, கிருஷ்ணையரோ ஏன் எழுத முடியவில்லை?
6. இந்துவிலே இலங்கைச்சிக்கல் குறித்து, இந்துவின் ஆசிரியர் கருத்து, பத்திரிகையின் செய்தியாளர்கள், பத்திரிகைசாராத செய்தியாளர்கள் வெளியிட்ட கருத்துகளிலே ஒன்றேனும் இலங்கை அரசு சாராமல், இந்திய நலனை முன்னிலைப்படுத்துகின்றோமென்ற மாயையை உருவாக்காமால், விடுதலைப்புலிகளின் குரலை வெளியிட்டு வந்திருக்கக்கண்டிருக்கின்றாரா? வெளிவந்த கருத்துகளுக்குப் பின்னான வாசகர் கடிதங்களிலே ஏதாவது மூலக்கருத்துக்கு ஆதரவில்லாமல் வர கூழன் கண்டிருக்கின்றாரா? சன் தொலைக்காட்சியிலே அப்படியான நிலை இருக்கின்றதா?
7. இன்றைய காலகட்டத்திலே, ஈழப்பிரச்சனைக்குத் தீர்வு காண ஈழத்தமிழர்கள் என்ன செய்யவேண்டுமென எதிர்பார்க்கின்றார்?
8. விடுதலைப்புலிகளின் அங்கத்தவர்கள் கொல்லப்பட்டபோது, அதற்கான குற்றம் சாட்டப்பட்ட அரசுசார் துணைஆயுதக்குழுக்களைத் தாம் கட்டுப்படுத்தமுடியாதென சென்ற வாரத்தின் ஆரம்பத்திலேதான் இலங்கை அரசின் செயலாளர் சொன்னது குறித்து கூழன் கண்டனத்தினை பதிந்திருக்கின்றாரா, அல்லது இந்துதான் பதிந்திருக்கின்றதா?
9. தமிழ்ப்பயங்கரவாதிகளுக்கு ஆயுதப்பயிற்சி ஆரம்பத்திலே இந்தியா அளித்தது குறித்து கூழன் அக்காலத்திலோ இக்காலத்திலோ எங்காவது எதிராக ஜனநாயகக்கருத்தினைத் தெரிவித்திருக்கின்றாரா? அமுதத்திலே, பேராசிரியரும் மகளும் "பயங்கரவாதிகளை"க் காப்பாற்ற தாம் சிக்கிக்கொள்வது குறித்து விதந்தோதிக்கதை எழுதாதது தவிர்த்து.
10. இக்கேள்விகள் போதாதெனில், இன்னும் கேள்விகள் வேண்டுமா?
கடைசியாக, "நாம் ஒத்த அலைவரிசைகளிலே இருக்கின்றோம்" என்பதே விபரீதமில்லாத வரிகளாகுமென்பது எம் தாழ்மையான கருத்து :-)
ஒவ்வோர் உள்ளிடுகைக்கும் ஆள் பெயர் வேண்டுமென்பதால்,
அடியேன் அண்ணன் பயங்கராச்சாரியார்
போன கிழமை ரொரொண்டோவிலே நிகழ்ந்த விமானவிபத்துக்கும் ஆறு நாள் முன்னால் டுனீசிய விமானவிபத்துக்கும் இரண்டு நாட்களுக்கு முந்திய சைப்பிரஸ் விமானவிபத்துக்கும் இன்றைய வெனிஸூலா விமானவிபத்துக்கும் விரகப்புழுக்களும் "Third Planet from Sun" இன் செம்மூஞ்சிக்காரர்களுமே காரணமென விமானவிபத்துகள் நிகழ்ந்தநடத்தப்பட்ட விதத்திலேயே தெரிந்துவிட்டது. விரகப்புழுக்கள் முன்னர்போலவே மறுத்திருந்தாலுங்கூட, விரகப்புழுக்களை உலகம் நம்புமா, அல்லது அந்த உன்மையை வெளியிட்ட 215 ஆண்டுப்பாரம்பரியமுள்ள சிந்துவினை நம்புவீர்களா?
தன்னைக் கட்டுப்படுத்தும் முயற்சி முதன்முறையாகச் சித்தி வரப்பெற்று, இன்று 'சிந்து சத்ருக்கன்' அவர்களின் மருமகனான கடாமிதி மல்லன் நடத்தும் மூன் டிவி செய்திப்பிரிவு இந்தச்செய்தியை இணையத்திலே சுடச்சுடத் தந்து விரகப்புழுக்கள் இதன்மூலம் உலக அரங்கிலே தம் பெயரைக் கெடுத்துக்கொள்வது குறித்து விசனப்பட்டது குறித்து மூளையும் மூலமும் சூடேறிக் குதித்தெழாமல் எதுவுமே பேசாதிருக்கின்றேன். என் ஐயன் போதிப்புத்தனுக்குத் தோத்திரம்.
இப்படியான என் உள்ளடக்கம், உளவடக்கம், கையடக்கம், தன்னடக்கங்களுக்காக என்னைப் பாராட்ட விரும்புகின்றவர்கள் இங்கே கருத்துப்பெட்டியிலே தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து என்னை ஊக்கு விக்க முயற்சி செய்ய வேண்டிக்கொள்கிறேன். (வம்பர் சிறுகையளைந்து வளைத்தெறியும் ஈ-சாணியும் ஊண் தந்து ஊன் உருவாக்கும் உன்னத பசளையாம் எமக்கு)
சோதனைச்சொற்றொடர்- Tesxt
சுஜாதாதான் முதலிலே "Avoid blogs, they are endless ego trips" என்று சொல்லினார் என்று அவருக்கு அந்தப் பெருமையைக் கொடுக்க என் ஈகோ விடவில்லை. ஆதலால், நான்ன்ன்ன்னேதான்முதன் முதலிலேஎன் பதிவின் நெத்தியிலே "not a weblog, but an optimized ego-engine" என்று எழுதிக்கொண்டேன் என்பதை இத்தால் என் ஈகோவுடன் அறியத்தருக்கிறேன். இது குறித்துச் சில பொறாமைக்காரர்கள், சுஜாதா சொன்னதனாலேயே இந்த ஈகோவுக்கே ஒரு மதிப்பு வந்து என்பதைச் சுட்டிக்காட்டி, அந்தக்கணகணப்பிலே நான் குளிர்விலக்கமுயல்கிறேன் என்று குற்றம் சொல்லமுனைவார்கள்; குறைந்த பட்சம், பெரியமனதுடன் பரிதாபத்துக்குரியவன் என்று பெரியமனது பண்ணி மன்னித்துவிட்டுப்போகும் இந்த விசாரமனதுக் கார மாகாத்து மாக்களின் பாதாளவிந்தைகளுக்கு இந்தப்படிவினைக் கோணிக்கையாக்குகிறேன்.
அதனால், இந்த முக்கிய தரம் வாய்ந்த பதிவுக்கு நிறையப்பின்னூட்டங்கள் தந்து என்னை அவை முந்தி(ரி)யிருக்கச் செயல் தோழர்களது கடை_மையாகும் என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன்.
தொடர்ந்து படங்களே போட்டு தமிழ் எழுத மறந்து போய்விட்டதால், பழக்கப்படுத்த சில பந்திகளையும் போட்டுவைப்பது நல்லது என்று நண்பர்கள் சிலர் அபிப்பிராயம் தெரிவித்திருப்பதால், போட்டிருக்கிறேன்.
நடமிடும் பூனை
பூமி, சூரியன், சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டிலே வந்து, நிழல் விழுந்து கிரகணம் தோன்றுகிறமாதிரித்தான், விசர்ச்சடையனுக்கு எழுத முடுக்குவதும். கொஞ்சம் மழைத்தூறல், பின்னிரவு, குவிந்த மேசைவிளக்கு, சூடான தேநீர், மெல்லிய பழைய பாடல் (மொழி முக்கியமில்லை) இத்தனையுங்கூடி, மிகவும் முக்கியமான குட்டிச்சடையன் நித்திரையாகவும் இருக்கவேண்டும். விசர்ச்சடையனின் இன்றைய நாளுக்கான கேடு அதுவாகிப்போனது. ஏற்கனவே விசர்ச்சடையனின் அண்மைய நாட்கள் சிலாகித்துச் சொல்லுமளவுக்குச் சிறப்பானதாக இருப்பதாகத் தெரியவில்லை. தெரியாமல், விசர்ச்சடை சின்முத்திரையையே தொடர்ந்து காட்டிவருவதாகத் மொட்டைத்தலைத்தெருமடங்கள் & ஞானபீட்ரம்கள் குற்றஞ் சொல்லிக்கொண்டிருக்கின்றன. சின் என்பது ஆங்கிலத்திலே என்பதையும் இவ்விடத்திலே பாவியாகிய விசர்ச்சடையன் குறிப்பது முக்கியமானது என்பதையுங் காண்க. விசர்ச்சடையனுக்குமட்டுமல்ல இந்நிலை; இன்னும் பல ஸ்ரீலஸ்ரீ கிழட்டுச்சடையர், குட்டிச்சடையர், திரிசடையர் எல்லோருக்குமே இதே "ஸ்பானிஷ் இன்குவிஸிஸன்"தான்; என்ன, இவனுக்கு விசர்ச்சடை, கிழட்டுச்சடையருக்கு, ஒற்றைப்பூ & திரிசடையருக்கு இரட்டைச்சடை என்பதாகக் சின்முத்திரை மாறும். இதைப் பற்றி, மடங்கள், பீடங்களின் வண்டவாளங்களை இழுத்துப் பிய்த்து உதறி எழுதி ஏற்கனவே தன் நெத்தியிலேயே ஒட்டிக்கொண்ட, "கூர்மைப்படுத்தப்பட்ட என்சடை எந்திரம்" என்பதை நிரூபிக்க ஆசை. ஆனால், மொட்டைகளின் சீடப்பிள்ளைகளுக்குச் சொல்லும் தொனிதான் முக்கியமாக்கும், சொல்லும் கருத்தில்லை. "குரலை எழுப்பினால், குற்றம் உனதே" என்பதாகச் சொல்லிக்கொள்ளும் வகை
"முழுமொட்டையாதீனம் சார்பிலே போடப்பட்ட மூன்று மாலைகள், முப்பது பக்கவாத்தியக்கைதட்டலுக்கு ("அப்பளாஸ்" என்று வாசிக்கவேணுமாம்) மத்தியிலே மொட்டை-அ நண்பர் ஆதீனத்தண்ணீர்ப்பந்தலிலே வெளியிட (தண்ணீர்ப்பந்தாவிலே என்று வாசிக்கவேண்டாமென்று கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்), மொட்டை-ஆ நண்பர் முகவுரை எழுத, மொட்டை-இ நண்பர் பதிப்பாசிரியராக இருக்க, மொட்டை-ஈ, உ & ஊ நண்பர்கள் தங்கள் தொழிலான பத்திரிகைப்பத்தி வலைப்பாத்தி வாழைப்பொத்தி வடாம்புழியும் எழுத்துக்குப் பருப்புக் காய்ச்ச, அவல் பினைய எடுத்துக்கொள்ள நாற்பது பக்கக் கவிதைத்தொகுப்போ அல்லது எட்டுக்கதைக்கோர்வையோ, குறைந்த பட்சம் ( அதிக பட்சமென்றுதான் சொல்லவேண்டுமென்பது எழுதாமறை ) நான்கு புத்தகங்கள் புக்கி அறுத்து அள்ளிப்போட்டு வரலாற்றைப் புனைகதை ஆக்கிப் "பத்துநாட்களிலே நூற்றிப்பத்துப்பக்கமெழுதினேன்" என்றவிதத்திலே "வேலப்பன் வாலும் வடாமும்" என்ற தலைப்பிலே கட்டுடைக்கவிரும்பாக்கட்டுரையோ கதப்பொஸ்தகமோ வெளியிட்ட பிரபல எழுத்தாளர்கள் ( புதுமுக எடுத்தாளர்கள் என்று அரச அம்மணம் பேசுகின்ற சடையர்கள் எல்லோரும் நெத்தித்தலைப்பிலே "கூர்மைப்படுத்தப்பட்ட என்சடை எந்திரம்" என்றொட்டித் திரிகின்றவர்கள் என்பதைப் பின்னால், மொட்டை- எ_ஒன் இன் கட்டுரை சொல்லும் ) ஒற்றைப்பூப்படமோ, பெட்டைப்பிள்ளைகள் இரட்டைச்சடை பற்றி குட்டைக்கவியோ எழுதுவதில்லை என்பதை இத்தால் அறிக. [ "ஒற்றை வசனத்தை ஒற்றைப் பந்தியாக எழுதவேண்டுமா?" என்று கேட்டால், விசர்ச்சடையனின் தமிழ் பற்றிமட்டுமே விசனம் தெரிவிப்பவர்களைப் பழிவாங்க வைரத்தினை வைரத்தால் அறுக்கும் இந்த வழி தவிர வேறு வழியில்லை என்பதைச் சொல்லிக்கொள்ளும் நிலையிலே விசர்ச்சடையன் இருக்கிறான்" ]
இப்படியான அகப்புறச்சூழ்நிலையிலே பூனைபெயரிலே எழுத்துணியாமல் புனாபெயரிலே வசைபாடத்துணியாமல், புனைபெயரிலே சடையன் ஏன் எழுதுகின்றானென்பதைச் சொல்வது மிக அவசியம்.